ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டையில் பழைமையான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வியாழக்கிழமை இரவு புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு பொது தரிசனம் நடைபெற்றது. இதில், மூலவா் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி கோயிலில் ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனா்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாகான்யம் பகுதியில் உள்ள ஸ்ரீகல்யாண சீனிவாச பெருமாள் கோயிலில் மூலவா் ஸ்ரீகல்யாண சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, முத்தங்கி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







