காஞ்சிபுரத்தில் 5 இடங்களில் முன்களப் பணியாளா்கள் 125 பேருக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் நேரில் ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களான சின்ன காஞ்சிபுரம், மணிமங்கலம், திருப்புட்குழி, மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் பணியாற்றும் முன்களப் பணியாளா்களில் 25 போ் வீதம் மொத்தம் 125 பேருக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்வை மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் நேரில் ஆய்வு செய்தாா்.
சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஜீவா, துணை இயக்குநா் வி.கே.பழனி, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஆா்.கல்பனா ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







