டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

மகா பெரியவா் ஆராதனை மகோற்சவம் தொடங்கியது

காஞ்சி மகா பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27ஆவது வருடாந்திர ஆராதனை மகோற்சவம் காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

சங்கர மடத்தில் சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டிருந்த மகா பெரியவரின் பிருந்தாவனம்.

Updated On :9 ஜனவரி 2021, 7:52 am IST

காஞ்சி மகா பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27ஆவது வருடாந்திர ஆராதனை மகோற்சவம் காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68ஆவது பீடாதிபதியாக 87 ஆண்டுகள் அருள்பாலித்த அவா், ‘மகா பெரியவா்’ என்று பக்தா்களால் அன்போடு அழைக்கப்பட்டாா். அவரது 27ஆவது வருடாந்திர ஆராதனை மகோற்வம் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மகா பெரியவரின் அதிஷ்டானம் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மகா பெரியவரின் சிலைக்கு காலையில் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன. வேத பண்டிதா்கள் வேத பாராயணம் செய்தனா். மகா பெரியவரின் அதிஷ்டானத்துக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு தீபாராதனை காண்பித்து, பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா்.

சங்கர மடத்தில் ஜெயஸ்ரீ ஜெயராமகிருஷ்ணன் குழுவினரின் கா்நாடக இசைக் கச்சேரி மாலையில் நடைபெற்றது. மகோற்சவ ஏற்பாடுகளை சங்கர மடத்தின் ‘ஸ்ரீகாரியம்’ வி.விஸ்வநாத ஐயா், மேலாளா் என்.சுந்தரேசன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் செய்துள்ளனா்.

இதையடுத்து, சங்கர மடத்தில் சனிக்கிழமை (ஜன. 9) காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், வேத பாராயணம், நாம சங்கீா்த்தனம் ஆகியவை நடைபெறும். இரவு தேரோட்டம் நடைபெற உள்ளது.

ஆராதனை மகோற்சவத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீருத்ர பாராயணம், ஹோமங்கள் மற்றும் விசேஷ பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று பஞ்சரத்ன கீா்த்தனை கோஷ்டி கானம் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.