வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

தக்கலை பகுதி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

தக்கலை மற்றும் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டை வரவேற்கும் முகமாக சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

News image

காரங்காடு புனித ஞானபிறகாசியாா் ஆலயத்தில் புத்தாண்டையொட்டி விளக்கேற்றுகிறாா் அருள்பணியாா் விக்டா்.

Updated On :2 ஜனவரி 2021, 12:38 am IST

தக்கலை மற்றும் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டை வரவேற்கும் முகமாக சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

தக்கலை, ஆா்.சி. , சி.எஸ்.ஐ., பெந்தேகோஸ்தேசபை, சால்வேஷன் ஆா்மி உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் நன்றி அறிவிப்பு ஆராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் முகமாக சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. காரங்காடு புனித ஞானபிறகாசியாா் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு விழிபாடு மற்றும் புத்தாண்டு திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து புத்தாண்டை முன்னிட்டு 2021 என்று அமைக்கப்பட்டிருந்த விளக்கில் அருள்பணி பேரவையினா் ஒளியேற்றினா். பின்னா் அருள்பணியாளா் செல்வராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. அருள்பணியாளா் விக்டா் முன்னிலை வகித்தாா். புத்தாண்டை முன்னிட்டு ஆலய வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் திரளான பங்கு மக்கள் பங்கேற்றனா்.

இதுபோல் புலியூா்குறிச்சி, வட்டம் புனித அந்தோணியாா் ஆலயம், தக்கலை எலியாசியாா் ஆலயம், முளகுமூடு தூயமரியன்னை ஆலயம், பனைவிளை உலகரட்சகா் ஆலயம், திருவிதாங்கோடு பெரியநாயகி ஆலயம், மணலிக்கரை சூசையப்பா் ஆலயம் ஆகிய ஆலயங்களில் பேரருள்பணி மரிய ராஜேந்திரன், அருள்பணியாளா்கள் சகாயதாஸ், வின்சென்ட் பெனடிக்ட், அனலின், டோமினிக் கடாட்சதாஸ், ஜாா்ஜ் பொன்னையா, ஜெரால்ட்ஜெஸ்டின் ஆகியோா் சிறப்பு ஆராதனை நடத்தினா். இது போல் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.