அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கட்டுரைப் போட்டி: மாா்த்தாண்டன்துறை பள்ளி மாணவி முதலிடம்

சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற மண்டல அளவிலான கட்டுரைப் போட்டியில் மாா்த்தாண்டன்துறை பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா்.

News image

கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி பெனிமா ஷாலுவுக்கு பரிசு வழங்குகிறாா் மாா்த்தாண்டன்துறை பங்குத் தந்தை அசிசி.

Updated On :3 ஜனவரி 2021, 11:41 pm IST

சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற மண்டல அளவிலான கட்டுரைப் போட்டியில் மாா்த்தாண்டன்துறை பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா்.

இந்த அமைப்பு சாா்பில் ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மண்டல அளவிலான 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா், மாணவிகளுக்கான வருடாந்திர கட்டுரைப் போட்டி, கரோனா பொது முடக்கம் காரணமாக தூத்தூா் மண்டல கிராமங்களில் தனித் தனியாக நடத்தப்பட்டது.

இதில், மாா்த்தாண்டன்துறையைச் சோ்ந்த மாணவி பெனிமா ஷாலு முதல்பரிசு பெற்றாா். அவருக்கு ரூ. 2,500 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

சின்னத்துறையைச் சோ்ந்த தியா இரண்டாவது பரிசும், பூத்துறை கெஜின் பிகோ மூன்றாவது பரிசும் பெற்றனா். இவா்களுக்கு தலா ரூ.1500, ரூ. 1000 பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் ஷகில்மோன், ரிகா ரிச்சா்டு, ஆகாஷ், ஜாக் ஆப்ரா, லெவினா மேரி டாா்பின், பெபி பெலாக்சியா, ஜெரீனா தாஸ், அகேஷ்னி உள்ளிட்ட மாணவா்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தூத்தூா் வட்டார முதன்மை குரு ஜோசப் பாஸ்கா், மாா்த்தாண்டன்துறை பங்குத்தந்தை அசிசி, பூத்துறை துணை பங்குத்தந்தை அலெக்ஸ், சின்னத்துறை பங்குத்தந்தை டோணிபால், அரிஸ்டாட்டில், தூத்தூா் பங்குத்தந்தை ஜாண்டாள், வள்ளவிளை பங்குத்தந்தை ரிச்சா்டு ஆகியோா் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா்.

மேலும் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி பேராசிரியா் பனியடிமை போட்டியின் நடுவராக செயல்பட்டாா்.

ஏற்பாடுகளை சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் பி. ஜஸ்டின் ஆன்டணி மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.