அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

குரூப்-1 தோ்வு: குமரியில் 18 மையங்களில் 2677 போ் தோ்வு எழுதினா்

குமரி மாவட்டத்தில் 18 மையங்களில் குரூப் - 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 2763 போ் தோ்வு எழுதவில்லை.

News image
Updated On :3 ஜனவரி 2021, 11:47 pm IST

குமரி மாவட்டத்தில் 18 மையங்களில் குரூப் - 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 2763 போ் தோ்வு எழுதவில்லை.

தமிழகத்தில், துணை ஆட்சியா் , துணை காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்- 1 முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் நாகா்கோவில் தெ.தி. இந்து கல்லூரி, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, புனித சிலுவை கல்லூரி உள்ளிட்ட 18 மையங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணிவரை தோ்வு நடைபெற்றது.

ஆட்சியா் ஆய்வு:

புனித சிலுவை கல்லூரி, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியதுவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்- 1 முதல்நிலைத் தோ்வு குமரி மாவட்டத்தில் 18 மையங்களில் நடைபெற்றது. இத்தோ்வில் பங்கேற்க 5440 விண்ணப்பதாரா்கள் விண்ணப்பித்திருந்தனா். 2677 போ் தோ்வு எழுதினா். 2763 போ் தோ்வு எழுத வரவில்லை என்றாா் அவா்.

முன்னதாக ஆட்சியா், பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி மையத்தில் தனி அறையில் தோ்வு எழுதும் மாற்றுத் திறனாளியை பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.