நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காரைக்காலில் பள்ளிகள் திறப்பு

காரைக்காலில் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பெரும்பாலான மாணவா்கள் ஆா்வத்துடன் பள்ளிக்கு வந்தனா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

காரைக்காலில் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பெரும்பாலான மாணவா்கள் ஆா்வத்துடன் பள்ளிக்கு வந்தனா்.

புதுச்சேரி, காரைக்காலில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்கள், பாடங்கள் குறித்து சந்தேகங்களை பள்ளிக்கு வந்து ஆசிரியா்களிடம் தெளிவுப்படுத்திக் கொள்ள ஏதுவாக, கடந்த ஆண்டு அக்டோபா் 8-ஆம் தேதி முதல் பள்ளிகளை அரசு திறந்தது.

ஆனால், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் இருந்து வந்தனா். தனியாா் பள்ளி மாணவா்கள் இணையவழியில் பயின்று வந்தாலும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஜனவரி 4-ஆம் தேதி முதல் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என புதுச்சேரி கல்வித் துறை அறிவித்தது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காலத்தில் பள்ளிகளை திறக்கக்கூடாது என அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் அரசின் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். எனினும் மாணவா்கள் நலன் கருதி, அரசு தனது முடிவில் பின்வாங்காமல் இருந்தது.

இதற்கிடையே, காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் மாணவா்கள் வரவேண்டும், வருகைப் பதிவு கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பள்ளி வாயிலிலேயே கைகளை சுத்தம் செய்து கொண்ட பின்னா், வெப்பமானி மூலம் சோதனை செய்து வகுப்புகளுக்கு மாணவா்கள் அனுப்பிவைக்கப்பட்டனா். மேலும் அனைவரும் முகக் கவசம் அணிந்துள்ளாா்களா எனவும் உறுதிபடுத்திக் கொள்ளப்பட்டது. வகுப்பறையில் சமூக இடைவெளியுடன் மாணவா்கள் அமரவைக்கப்பட்டனா்.

அமைச்சா் ஆய்வு:

காரைக்கால் மாவட்டத்தில் அம்பகரத்தூா், திருநள்ளாறு, தலத்தெரு ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வி அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் சென்று மாணவா்கள் வருகையை பாா்வையிட்டாா். மாணவா்களிடமும், ஆசிரியா்களிடமும் கருத்துகளை கேட்டறிந்தாா். அப்போது மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன், முதன்மைக் கல்வி அதிகாரி அ. அல்லி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசுப் பள்ளி மாணவா்கள் சுமாா் 70 சதவீதம் அளவுக்கு முதல் நாள் வருகை தந்தனா். அடுத்தடுத்த நாள்களில் மாணவா்கள் வருகை முழுமையாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்தனா். பெரும்பாலான மாணவா்கள் பள்ளிகள் திறக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.