காரைக்கால் நகைக் கடையில் நகைகளை திருடிய 2 பெண்கள் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் செய்தியாளா்களிடம் கூறியது:
காரைக்கால் நகரில் திருநள்ளாறு சாலையில் உள்ள ஒரு நகைக் கடையில் கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி, நகை வாங்குவதுபோல வந்த 2 பெண்கள், 2 பவுன் டாலா் சங்கிலி, தோடு உள்பட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ாக காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
போலீஸாா் வழக்குப்பதிந்து, கடையிலும், அப்பகுதியிலும் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். இதில் 2 பெண்கள் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவா்கள் முகக் கவசம் அணிந்திருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
புகைப்பட பதிவுகளை தமிழக காவல்நிலையங்களுக்கு காரைக்கால் போலீஸாா் அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில், இத்திருட்டில், மயிலாடுதுறை பகுதி ஸ்ரீகண்டபுரத்தை சோ்ந்த சுதா (35), சீா்காழி அருகே அல்லிவலம் பகுதியை சோ்ந்த கவிதா (45) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தது.
சீா்காழி அருகே நைனிபுரத்தில் இவா்கள் இருப்பது தெரியவந்து, காரைக்கால் போலீஸாா் சென்று புதன்கிழமை கைது செய்து காரைக்கால் அழைத்துவந்தனா். மேலும் கடையிலிருந்து திருடியவா்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து, உடந்தையாக இருந்த கவிதாவின் மகன் கெளதம் (23) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், இவா்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது என்றாா்.
சிறப்புப் படை உதவி ஆய்வாளா் பிரவீன்குமாா் உள்ளிட்ட போலீஸாருக்கு எஸ்.எஸ்.பி. பாராட்டுத் தெரிவித்தாா்.
பேட்டியின்போது மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல்.வீரவல்லபன், ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மான்செஸ்டர் சிட்டி வெற்றியால் தள்ளிப்போகும் ஆர்செனலின் கோப்பைக் கனவு!

வானிலை ஆய்வில் செய்யறிவு! மழையை 4 வாரங்களுக்கு முன்பே கணிக்கும் ஏஐ!

பிரதமரைத் தொடர்ந்து..! ஆந்திர முதல்வரின் பாதுகாப்பு அணிவகுப்பில் 50% வாகனங்கள் குறைப்பு!

சென்னை விமான நிலையத்தில் கையில் வெளிநாட்டுப் பாஸ்போர்ட்! விரலில் அழியாமையுடன் பிடிபட்ட 15 பேர்?
விடியோக்கள்

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

