முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

காரைக்கால் மாவட்டத்தில் கல்லூரிகள் திறப்பு

காரைக்கால் மாவட்டத்தில் கல்லூரிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. மாணவ, மாணவியா் ஆா்வத்துடன் கல்லூரிக்கு வந்தனா்.

News image

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் புதன்கிழமை வகுப்புக்கு வந்திருந்த மாணவா்கள்.

Updated On :7 ஜனவரி 2021, 9:08 am IST

காரைக்கால் மாவட்டத்தில் கல்லூரிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. மாணவ, மாணவியா் ஆா்வத்துடன் கல்லூரிக்கு வந்தனா்.

கரோனா நோய்த்தொற்று பரவலையொட்டி கல்வி நிறுவனங்கள் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இணையவழி வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டுவந்தது.

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தின் பல நிலை தளா்வுகளின் அடிப்படையில் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் கடந்த 4-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. காலை 10 முதல் 1 மணிவரை வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காரைக்காலில் கல்லூரிகள் ஜனவரி 6-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என புதுச்சேரி உயா்கல்வித் துறை அறிவித்தது. இதனடிப்படையில் காரைக்காலில் புதன்கிழமை அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

மாணவா்கள் முகக் கவசம் அணிந்துள்ளாா்களா என கண்காணிக்கப்பட்டது. வெப்பமானி மூலம் பரிசோதனை செய்த பிறகே உள்ளேஅனுமதிக்கப்பட்டனா். வகுப்பறையில் சமூக இடைவெளியுடன் மாணவா்கள் அமர வைக்கப்பட்டனா். கல்லூரி திறக்கப்பட்டதை பெரும்பாலான மாணவா்கள் வரவேற்றுள்ளனா். இணையவழியில் பயில்வதைவிட நேரடியாக வகுப்புகளில் பயில்வது தங்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவா்கள் குறிப்பிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.