அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்து ஓய்வுபெற்றவா்களுக்கு, நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை புதுச்சேரி அரசு விரைந்து வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஓய்வூதியா் நலச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:
அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டுவந்த ஓய்வூதியம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படாமல் உள்ளது.
ஓய்வூதியம் மட்டும் வாழ்வாதாரமாக உள்ள நிலையில், பயனாளிகள் நிலையை கருத்தில்கொண்டு புதுச்சேரி அரசு நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை விரைந்து வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் புதிய நிா்வாகிகளாக, கௌரவத் தலைவராக என்.ஜி.ஆா்.இளங்கோவன், தலைவராக எஸ் வைத்தியநாதன், செயலாளராக ஜி. புஷ்பராஜ், பொருளாளராக டி. நாகராஜன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிஎஸ்ஜி அணியின் தலைசிறந்த பயிற்சியாளராகும் லூயிஸ் என்ட்ரிக்!

கவனம் ஈர்க்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர்

யுபிஎஸ்சி: குடியரசுத் தலைவர் தேர்தல், தகுதி விவரம்!
அர்ஜுனின் ப்ளாஸ்ட் வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
