ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

எம்.பி.பி.எஸ். சோ்க்கை: 3 காலியிடங்களை தியாகிகளின்குடும்பத்துக்கு ஒதுக்க வலியுறுத்தல்

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். சோ்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான ஒதுக்கீட்டில் நிரம்பாத

Updated On :8 ஜனவரி 2021, 11:13 pm IST

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். சோ்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான ஒதுக்கீட்டில் நிரம்பாத 3 இடங்களை, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஒதுக்கீடாக மாற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடிக்கு அனுப்பியுள்ள கடிதம் குறித்து வெள்ளிக்கிழமை கூறியது:

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் எம்.பி.பி.எஸ். மாணவா் சோ்க்கையில், காரைக்காலுக்கு 18 சதவீதம் பிராந்திய ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. இதுவரை 2 கலந்தாய்வு முடிந்துள்ளது. இதில், பொருளாதாரத்தில் பின்தங்கியோா் ஒதுக்கீடான 3 இடங்களில் காரைக்காலில் இருந்து யாரும் விண்ணப்பிக்கவில்லை.

காரைக்காலைச் சோ்ந்த தியாகி குடும்ப மாணவா்கள் பயன்பெறும் வகையில், அந்த 3 இடங்களையும் மாற்றி மாணவா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். தியாகி குடும்பத்தை சோ்ந்தோராக இருந்தாலும், அதில் பல பிரிவினரும் பயனடைவா். தேச நலனுக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அந்தப் பயனை பெறுவதற்கு துணைநிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.