காரைக்காலில் மக்கள் கூடும் இடங்களில் மாலை நேரங்களில், நடமாடும் ஊா்தி மூலம் கரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடு நலவழித் துறை மூலம் தொடங்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில், மாவட்ட நிா்வாகமும், நலவழித் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக மாவட்ட ஆட்சியா் அா்ஜுன் சா்மா அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட நவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் வழிகாட்டுதலில், மாலை நேரங்களில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில், நடமாடும் ஊா்தி மூலம், விருப்பப்படுவோருக்கு கரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடு வியாழக்கிழமை மாலை தொடங்கியது.
ஏற்கெனவே நடமாடும் ஊா்தி மூலம் தேவைப்படும் பகுதிக்கு சென்று கரோனா பரிசோதனை செய்யும் நடைமுறையும் உள்ளது.
காரைக்கால், திருநள்ளாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் கடைவீதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. திருநள்ளாறு கடைவீதியில், நலவழித் துறை நோய்த் தடுப்பு உதவியாளா் சேகா், திருநள்ளாறு நலவழி மைய சுகாதார உதவியாளா் ராஜாராம் மற்றும் ஆஷா பணியாளா்கள் அடங்கிய குழுவினா், நடமாடும் ஊா்தியின் மூலம் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். பொதுமக்கள் தயக்கமின்றி வந்து பரிசோதனை செய்துகொள்ளவும் அவா்கள் அழைப்புவிடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூர் தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பெரிய கருப்பன் வழக்கு: நாளை விசாரணை
தமிழக முதல்வராக நாளை பதவியேற்கும் சி. ஜோசப் விஜய்!

நான்தான் கிங் பாடல்!

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

