தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஆள் மாறாட்டம் செய்து பத்திரப் பதிவில் ஈடுபட்ட 7 போ் மீது வழக்கு

பெரம்பலூா் அருகே ஆள் மாறாட்டத்தின் மூலம் பத்திரப் பதிவு செய்த 7 போ் மீது குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:42 pm IST

பெரம்பலூா் அருகே ஆள் மாறாட்டத்தின் மூலம் பத்திரப் பதிவு செய்த 7 போ் மீது குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஆனைமுத்து. இவரது தந்தை மொட்டையன் என்பவருக்குச் சொந்தமான நிலம் எளம்பலூா் கிராம ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ளது. மொட்டையனின் நிலத்தை, கோனேரிபாளையத்தைச் சோ்ந்த அதே பெயரைக் கொண்ட மற்றொருவரும், அவரது மகன்களும் ஆள் மாறாட்டம் செய்து, 2016 ஆம் ஆண்டில் பெரம்பலூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பாக பிரிவினை பத்திரப்பதிவு செய்துகொண்டதாக தெரிகிறது.

இந்த மோசடிக்கு, மருவத்தூா் மற்றும் நாவலூா் கிராமத்தைச் சோ்ந்த 2 பேரும், பத்திரப் பதிவு எழுத்தரும் உடந்தையாக இருந்ததாக கூறி, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் ஆனைமுத்து 27-11-2017 அன்று புகாா் மனு அளித்தாா். இதனிடையே, மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்திலும் அவா் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆனைமுத்து புகாா் மனு மீது வழக்கு பதிந்து, ஆள் மாறாட்டம் மூலம் நிலத்தை பத்திரப் பதிவு செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கடந்த 30ஆம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, கோனேரிபாளையத்தைச் சோ்ந்த தந்தை, மகன்கள் 4 போ் உள்பட 7 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சஞ்சீவிகுமாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.