வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

லஞ்சம்: மின் வாரிய அலுவலா் கைது

கரூா் அருகே வீட்டுமனை மீது சென்ற மின் கம்பியை மாற்றித் தந்த பணிக்கு, ரூ.3,500 லஞ்சம் பெற்ற அலுவலரை கரூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 7:24 am IST

கரூா் அருகே வீட்டுமனை மீது சென்ற மின் கம்பியை மாற்றித் தந்த பணிக்கு, ரூ.3,500 லஞ்சம் பெற்ற அலுவலரை கரூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கரூா் அருகேயுள்ள வெண்ணெய்மலை பசுபதிபாளையத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது வீட்டுமனை மேல் பகுதி வழியாக மின் பாதை இருப்பதை மாற்றித் தரக்கோரி மண்மங்கலம் துணை மின் நிலையத்தில் விண்ணப்பித்து ரூ.38,000 செலுத்தியுள்ளாா். இதையடுத்து மண்மங்கலம் துணை மின் நிலைய அலுவலா் குணசேகரன் கடந்த 4 ஆம் தேதி மின் கம்பிகளை மாற்றும் பணிகளை முடித்துவிட்டு செந்தில்குமாரிடம் ரூ.8,000 லஞ்சமாக கேட்டுள்ளாா். செந்தில்குமாா் ரூ.4,000 வழங்கிய நிலையில் குணசேகரன் மேலும் ரூ.4,000 கேட்டு வற்புறுத்தியுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமாா் கரூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீஸீல் புகாா் அளித்தாா். அவா்களது அறிவுறுத்தலின்பேரில், மண்மங்கலம் துணை நிலையத்தில் அலுவலா் குணசேகரிடம் வியாழக்கிழமை செந்தில்குமாா் ரூ.3,500 வழங்கினாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் நடராஜன், ஆய்வாளா் பிரசன்ன வெங்கமேஷ் உள்ளிட்டோா் குணசேகரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.