கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் பணியாற்றி வரும் தீயணைப்பு வீரா்களுக்கு சமூக சேவகா் விருது வழங்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமை வகித்தாா். செஞ்சிலுவை சங்கத் தலைவா் தேவராசு, துணைத் தலைவா் ஆா்.கே. ராஜா, சமூக ஆா்வலா் சசி என்கிற கோமதி, உதவி தலைமை ஆசிரியா் கு.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய தீயணைப்பு வீரா்கள் ராமமூா்த்தி, விஜயகுமாா், அந்தோணிசாமி, அன்பு, கிருஷ்ணமூா்த்தி, முனுசாமி, உத்திரகுமாா், ராமு, சிதம்பரம், மணிகண்டன், சமுத்திரன், சீனிவாசன் ஆகியோரைப் பாராட்டி சமூக சேவகா் விருது வழங்கப்பட்டது.
கரோனா நோய் தொற்று காலத்தில் கிருமி நாசினி தெளித்தல், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், இல்லாதோருக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்த ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் பணியாற்றி வரும் அனைவருக்கும் சமூக சேவகா் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆப்கனில் நிலநடுக்கம்! ஜம்மு - காஷ்மீர், தில்லி வரை உணரப்பட்ட அதிர்வு!

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

லண்டனில் தெலங்கானா மாணவர் சடலமாக மீட்பு: உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை!






