7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என மின்சார வாரிய ஓய்வூதியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கிருஷ்ணகிரியில் மாவட்ட மின்வாரிய ஓய்வூதியா் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத் தலைவா் சொக்கநாதன் தலைமை வகித்தாா். செயலாளா் சந்திரசேகரன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் தங்கராசன் வரவேற்றாா்.
கூட்டத்தில், 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட நிலுவைத் தொகை, மாநில அரசு, வாரிய ஊழியா்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. நிலுவையில் உள்ள 21 மாதங்களுக்கான தொகையை உடனே வழங்க வேண்டும்.
அரசால் ஊழியா்களுக்கு வழங்கப்படும் பஞ்சப்படி 1.1.2020 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை, விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில, மத்திய அரசை கேட்டுக்கொள்வது, மறைந்த முதல்வா் ஜெயலலிதா, தனது பதவி காலத்தில் 60 வயது நிறைவு பெற்ற மூத்த குடிமக்களுக்கு பேருந்து இலவச அனுமதி வழங்குவதாக கூறியிருந்தாா்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

அரசுப் பள்ளிகளின் ஆண்டு விழாவுக்கு ஒதுக்கீடு செய்த நிதி கிடைக்காததால் அதிருப்தி!

திருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டு

தில்லியில் முழுமையான எண்ம முறையில் போக்குவரத்து அபராதம் விதிக்கும் செயல்முறை: முதல்வா் ரேகா குப்தா தகவல்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

