மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

துரை தயாநிதி உட்பட 15 பேருக்கு முன் ஜாமீன் : பிடிவாரண்டும் ரத்து

கிரானைட் முறைகேட்டு வழக்கில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி மீதான பிடிவாரண்ட் ரத்து. முன் ஜாமீனை அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

News image
Updated On :10 டிசம்பர் 2012, 6:37 am

தர்மராஜ்

கிரானைட் முறைகேட்டு வழக்கில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி மீதான பிடிவாரண்ட் ரத்து. முன் ஜாமீனை அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார். இதில் நாகராஜன் உப்பட பலர் பங்குதாரர்களாக இருந்தனர். இதில் இருந்த துரை  தயாநிதி பங்குதாரர் பொறுப்பில் இருந்து விலக்கிக் கொண்டார்.

இந்த நிலையில், பிஆர்பி கிரானைட் உள்ளிட்ட பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள் மற்றும் கனிமவள நிறுவனத்துக்குச் சொந்தமான மலைகளையும் ஆக்ரமிப்புச் செய்து பல ஆயிரம் கோடி கிரானைட் கற்களை வெட்டிக் கடத்தியதாக 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் மீதும் பதிவான வழக்கில் தலைமறைவாக இருந்த துரைதயாநிதிக்கு மேலூர் நீதித்துறை நடுவர் மன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. தன் மீதான பிடியாணையை ரத்து செய்யக் கோரியும், முன் ஜாமீன் வழங்கக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார். இதேப்போன்று சிந்து கிரானைட் அதிபர். டி.கே. செல்வராஜ், அவர் மனைவி மற்றும் மகன்களுக்காகவும், மதுரா கிரானைட் உரிமையாளர் ரஃபீக் உள்ளிட்ட 9 பேரும் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம், துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேரது முன் ஜாமீன் மனுக்களை அனுமதித்து அனைவரும் சம்பந்தப்பட்ட கீழவளவு காவல்நிலையத்தில் தினசரி 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திடுமாறு உத்தரவிட்டார்.

மேலும், துரை தயாநிதி மீது மேலூர் மேஜிஸ்ட்டிரேட் பிறப்பித்த பிடியாணையையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.