/

பொள்ளாச்சி அருகே சாலையில் கொட்டப்பட்ட கந்தக அமிலம்: கண் எரிச்சலால் மக்கள் அவதி

பொள்ளாச்சி, ஜூலை 7: பொள்ளாச்சி அருகே கேரளா செல்லும் சாலையில் கந்தக அமிலம் கொட்டப்பட்டுள்ளது. அதிலிருந்து எழுந்த புகையால் மக்கள் கண் எரிச்சலில் அவதிப்பட்டனர். பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:11 pm

பா. இளையபதி

பொள்ளாச்சி, ஜூலை 7: பொள்ளாச்சி அருகே கேரளா செல்லும் சாலையில் கந்தக அமிலம் கொட்டப்பட்டுள்ளது. அதிலிருந்து எழுந்த புகையால் மக்கள் கண் எரிச்சலில் அவதிப்பட்டனர்.

பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் நஞ்சய கவுண்டன்புதூரில் இன்று காலை திடீரென புகை வந்துள்ளது. சாலையின் ஒரு புறத்தில் இருந்து எழுந்த புகையால், மக்கள் பீதி அடைந்து என்ன என்று பார்த்தனர். அப்போது அங்கே யாரோ கந்தக அமிலத்தை கொட்டிவிட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது. இதனால் மக்களுக்கு கண் எரிச்சல் அதிகமானது. இதை அடுத்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸார் அந்த இடத்தைப் பார்வையிட்டு, கந்தக அமிலத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக தண்ணீர் பீய்ச்சி அடித்து, நிலைமையை சீராக்கி வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் இருந்து கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டிச் செல்லும் போக்கு இருப்பதால், நேற்று இரவில் கேரளாவில் இருந்து வந்த லாரிகள் அல்லது வேறு வாகனங்களில் வந்தவர்கள் இவ்வாறு கொட்டிவிட்டுச் சென்றார்களா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.