திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மதுரையில் அதிமுக வார்டு செயலாளர் கொலை

திருப்பரங்குன்றம் (மதுரை), ஜூன் 11: மதுரையில் அதிமுகவின் 88வது வார்டு செயலாளர் மனோகரன் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார். மனோகரனுக்கும் பூமிநாதன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளதாம். கடந்த 4

Updated On :20 செப்டம்பர் 2012, 12:09 am

திருப்பரங்குன்றம் (மதுரை), ஜூன் 11: மதுரையில் அதிமுகவின் 88வது வார்டு செயலாளர் மனோகரன் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.

மனோகரனுக்கும் பூமிநாதன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளதாம். கடந்த 4.5.2012ல் மனோகரன் வாய்த்தகராறில் பூமிநாதனையும் அவரது உறவினர்களையும் தாக்கினார் என்று புகார் பதிவு செய்யப்பட்டு வழக்கு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு அவனியாபுரம் சிந்தாமணி பகுதியில் வைத்து, பதில் தாக்குதலாக பூமிநாதன் மற்றும் அவரது உறவினர்கள் மனோகரனைத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மதுரை பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலன் தராமல் இரவு 1 மணி அளவில் அவர் உயிரிழந்தார். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.