மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிஆர்பி குவாரியை நடத்த 4 வார இடைக்காலத் தடை

மதுரையில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட பிஆர்பி குவாரியை நடத்த 4 வார காலத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2012, 8:58 am

தர்மராஜ்

மதுரையில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிஆர்பி குவாரியை நடத்த 4 வார காலத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிஆர்பி கிரானைட் நிறுவனத்தின் சீலை அகற்றுவதற்கு நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என். பாஷா, தேவதாஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், பிஆர்பி குவாரியை நடத்த 4 வார காலத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், 4 வாரத்துக்குள் பிஆர்பி கிரானைட் குவாரி மீதான விசாரணை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அடுத்த வழக்கு விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டனர்.

உத்தரவில், பிஆர்பி கிரானைட் குவாரி பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்க அனுமதி அளித்துள்ளனர்.

மதுரையில் கிரானைட் கற்களை விதிமுறைகளை மீறி வெட்டி எடுத்து கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பிஆர்பி உரிமையாளர் பழனிச்சாமி கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில், பிஆர்பி கிரானைட் குவாரிக்கு வைத்த சீலை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்ற மதுரைக் கிளை நீதிமன்றம், சீலை அகற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.