நடராஜர் கோயில் உண்டியலில் ரூ.5.16 லட்சம் காணிக்கை
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நவம்பர் 21-ம் தேதி புதன்கிழமை 20-வது முறையாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.5.16 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது...


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நவம்பர் 21-ம் தேதி புதன்கிழமை 20-வது முறையாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.5.16 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது. இதுவரை மொத்தம் ரூ.1.5 கோடி உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்துள்ளது.
÷நடராஜர் கோயிலை உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து அறநிலையத் துறை கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கையகப்படுத்தி புதிய நிர்வாக அலுவலரை நியமித்தது. பின்னர் பிப்ரவரி 5-ம் தேதி சித்சபை எதிரே முதல்முதலாக கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக கோயிலில் பல்வேறு இடங்களில் மொத்தம் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டன.
÷தற்போது புதன்கிழமை இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் சி.ஜோதி, செயல்அலுவலர் க.சிவக்குமார், ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் 20-வது முறையாக உண்டியல் எண்ணப்பட்டது.
÷இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 9 உண்டியல்களை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 5.16 லட்சம் கிடைத்தது.
÷மேலும் உண்டியலில் மலேசியா ரிங்கட்- 23, சிங்கப்பூர் டாலர்- 4, யு.எஸ்.ஏ. டாலர்-1 ஆகியவை இருந்தன. உண்டியல் வைக்கப்பட்டு 4 ஆண்டுகளில் இதுவரை 20 முறை உண்டியல் எண்ணியதில் மொத்தம் ரூ.1.5 கோடி கிடைத்துள்ளது என செயல்அலுவலர் க.சிவக்குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...