மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பால்தாக்கரே அஸ்தி கொண்டு செல்ல அனுமதி மறுப்பு: குமரி மாவட்டத்தில் பதற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் மறைந்த சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே அஸ்தியைக் கொண்டு செல்ல போலீஸார் அனுமதி மறுத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Updated On :27 நவம்பர் 2012, 8:41 am

கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் மறைந்த சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே அஸ்தியைக் கொண்டு செல்ல போலீஸார் அனுமதி மறுத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மறைந்த பால் தக்கரேவின் அஸ்தியை முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கரைப்பதற்காக சிவசேனைக் கட்சியினர் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வாகனங்களில் வந்தனர். அவர்கள் வந்த வாகனங்கள், தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் தடுத்து நிறுத்தப்பட்டது. களியக்காவிளை சோதனைச் சாவடியில் அவர்களைத் தடுத்து நிறுத்திய தமிழக போலீஸார், அவர்கள் வந்த வாகனங்களை தமிழகத்துள் உள்ளே விட அனுமதி மறுத்தனர். இதனால் அனைத்து வாகனங்களும் தடுக்கப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்த சிவசேனைக் கட்சியினர், போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிராக கோஷம் இட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.