ஈரோடு பெரியவலசு கணபதிநகர் எம்.ஜி.ஆர். காலனி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(28). மினிடோர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார்.நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை.அவரது தந்தை நண்பர்கள், உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்தும் எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் சக்திவேல் வீட்டின் அருகில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றின் மொட்டை மாடியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது இன்று தெரிய வந்தது. கொலையாளிகள் அவரது தலையில் கல்லைபோட்டு கொடூரமான முறையில் கொன்று உள்ளனர். தகவலறிந்த வீரப்பன் சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவகுமார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








