நாட்டில் பல்வேறு மாநிலங்களில் போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதை பல்வேறு தொலைக்காட்சிகள் செய்தியாக ஒளிபரப்பி வருவதையடுத்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை வழக்காக எடுத்துக்கொண்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி தலைமையிலான நீதிபதிகள் போலீஸ் சீர்திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை ஏன் மதிக்கவில்லை என்று மத்திய அரசு, உள்துறை அமைச்சகம், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்கள், உள்துறை செயலர்கள், மாநில காவல்துறை டி.ஜி.பி.க்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி 7 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








