தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

ராம் சிங் மரணத்தில் சந்தேகம் : தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

தில்லியில் உள்ள திகார் சிறையில் இன்று காலை மரணம் அடைந்த பாலியல் பலாத்கார குற்றவாளி ராம் சிங்கின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On :11 மார்ச் 2013, 7:23 am

தில்லியில் உள்ள திகார் சிறையில் இன்று காலை மரணம் அடைந்த பாலியல் பலாத்கார குற்றவாளி ராம் சிங்கின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திகார் சிறையில் இருந்த ராம் சிங் இன்று காலை தான் அணிந்திருந்த துணியால், ஜன்னல் கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், ராம் சிங் தற்கொலை செய்து கொள்ளும் போது, அந்த அறையில், அவனுடன் மற்றொரு குற்றவாளியும் இருந்துள்ளார். அதே சமயம், ராம் சிங் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதால், அவனது சிறை அறைக்கு என தனி அதிகாரியும் உள்ளார்.

இந்த நிலையில், ராம் சிங் எவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தற்போது ராம் சிங்கின் உடல் தீன் தயால் உபாத்யாய் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சிறை அறையில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.