விழுப்புரத்தில், "மிஸ் கூவாகம் 2013' போட்டிகள் ஏப்ரல் 22-ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறும் என்று சமுதாய மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் சலீமா தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி ஒன்பது திருநங்கைகள் அமைப்பைச் சேர்ந்த நாங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
திருநங்கைகளை வரவேற்கும் விதமாக வரவேற்பு வளைவுகள் ஏப்ரல் 22-ம் தேதி காலை திறந்து வைக்கப்படுகிறது. இதனை நகர்மன்றத் தலைவர் பாஸ்கரன் திறந்து வைக்கிறார். காலை 10.30 மணிக்கு திருநங்கைகளுக்கான பட்டிமன்றங்கள் நடைபெறுகிறது. மாலை 6 மணி அளவில் மிஸ் கூவாகம் 2013 போட்டிகள், விழுப்புரத்தில் நடைபெறும். இப் போட்டிகளை ஆட்சியர் வா.சம்பத் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட இயக்குநர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் பொக்லைன் இயந்திரத்தின் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.300 உயா்வு

தனியாா் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

விஜய்தாமு, தளவாய் சுந்தரம், இசக்கி சுப்பையா வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்குகள் தாக்கல்






