கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரம் லாட்ஜில் ஆயுதங்களுடன் தங்கியிருந்த கூலிப்படையினர் 5 பேரை பிடித்து போலீஸார் விசாரணை

சிதம்பரத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியிருந்த கூலிப்படையினர் 5 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :5 ஏப்ரல் 2013, 5:12 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியிருந்த கூலிப்படையினர் 5 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் எஸ்.பி.கோயில்தெருவில் தனியார் லாட்ஜில் சந்தேகப்படும்படியாக 5 பேர் தங்கியுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் லாட்ஜிற்கு சென்று சோதனை மேற்கொண்டு வீச்சரிவாள்கள், கத்தி, இரும்பு பைப் ஆகிய ஆயுதங்களுடன் தங்கியிருந்த 5 பேர் கூலிப்படையினர் என தெரியவந்து, அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் புதுச்சேரியைச் சேர்ந்த ஜெரால்டு, சிவக்குமார், கார்த்திக், பாண்டியன், சிதம்பரத்தை அடுத்த உத்தமசோழமங்கலத்தைச் சேர்ந்த ஸ்டாலின் ஆகிய 5 பேர் என தெரியவந்துள்ளது. யாரையோ கொலை செய்ய திட்டமிட்டு லாடஜில் தங்கியிருந்ததாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.