இதுகுறித்து சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தது: சிதம்பரம் நகரில் பட்டப்பகலிலேயே வீடு புகுந்து திருட்டும், வழிபறி சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக நடராஜர் கோயிலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளிடம் தொடர்ந்து திருட்டு போவதால், சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துவிட்டது. சிதம்பரம் பகுதியில் தொடர் திருட்டு, வழிபறி, கொலை சம்பவங்கள் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டதற்கு காரணம் சிதம்பரம் கோட்ட காவல்துறையினரின் மெத்தன போக்குதான். அதிகாரிகளும் இரவு ரோந்து செல்வதில்லை, போலீஸாரும் இரவு ரோந்து செல்வதில்லை. சிதம்பரம் பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டு, வழிபறி, கொலை சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கையின் போது கேள்வி எழுப்பி முதல்வரிடம் தெரிவிப்பேன் என்கிறார் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ.