பொதுவிநியோக திட்ட செயல்பாடு முழுவதும் 100 சதவீத கணினி மயமாக்க வேண்டும். அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியமான உணவுப் பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். போலி குடும்ப அட்டைகளை ஒழித்திட கைவிரல் ரேகை பதிவு செய்து டிஜிட்டல் முறையில் புதிய குடு்ப அட்டைகள் வழங்க வேண்டும். 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் எடையாளர் நியமனம் செய்ய வேண்டும் என ஜி.ஜெயசந்திரராஜா தெரிவித்தார். அப்போது மாவட்டத் தலைவர் துரை.சேகர், பிரசார செயலர் ஏ.நரசிம்மன், செயற்குழு உறுப்பினர்கள் பி.இளவரசன், எஸ்.யேசுராஜ், ஆர்.சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.