இந்நிலையில் புல்லார் வழக்கில் கருணை மனு அளித்து மிக நீண்ட காலத்திற்கு பிறகு குடியரசுத் தலைவர் நிராகரித்தது சட்டவிரோதமானது என்ற வாதத்தை நிராகரித்த உச்சநீதிமன்றப் பிரிவு புல்லார் மரண தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்துவிட்டது. புல்லார் வழக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் வழக்கும், பெரிதும் ஒத்தத் தன்மையானவை என இதே நீதிமன்றம் வரையறுத்துவிட்டால், புல்லார் வழக்கில் தீர்ப்புரைத்தது போலவே உச்சநீதிமன்றம் மூவர் வழக்கிலும் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்புரைக்கு ஆபத்து உண்டு. இந்நிலையில் மூன்று தமிழர் உயிர் காக்க இப்போது இருக்கிற முதன்மையான வாய்ப்பு தமிழகஅரசின் கைகளில்தான் உள்ளது. அரசமைப்பு சட்டவிதி 161-ன் படி தமிழக அமைச்சரவை முடிவு செய்து, மாநில ஆளுநர் வழியாக பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.