பின்னர் சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியர் எம்.விஜயா, ஏஎஸ்பி எம்.துரை, இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்கள் வ.க.செல்லப்பன், பா.தாமரைச்செல்வன், தயா.தமிழன்பன், முன்னாள் மாவட்டச் செயலாளர் திருமாறன், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதும், குற்றவாளிகளில் தலித் அல்லாத சமூகத்தினர் இருந்தால் எஸ்சி., எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வதாகவும் முடிவு செய்யப்பட்டது இதனை அடுத்து ராஜா உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று மாலை உடலை பெற்றுச் சென்றனர்.