இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தொடர் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை: தடுத்து நிறுத்திட கோரி முதல்வரிடம் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ நேரில் கடிதம்

சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை சம்பவங்களை தடுத்தி நிறுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை

News image
Updated On :19 ஏப்ரல் 2013, 12:09 pm

G.Sundararaj

சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை சம்பவங்களை தடுத்தி நிறுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.

அந்த கடிதத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தொடர் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நாளுக்கு, நாள் அதிகரித்து பொதுமக்கள் அச்சமும், பீதியும் அடைந்து வருகின்றனர். தொடர் சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் போதிய கவனத்துடன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. காவல்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் சமூக விரோத நடவடிக்கைகள் அதிகரி்த்துக் கொண்டே வருகின்றன. இச்சம்பவங்களுக்கு காவல்துறை உதவி கண்காணிப்பாளராக உள்ள துரை ஐபிஎஸ்ஸின் செயல்பாடின்மையே முக்கிய காரணம் என்ற புகார் குறித்தும் உரிய விசாரணை நடத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் பரங்கிப்பேட்டை அகரம் காலணியைச் சேர்ந்த ராஜா என்ற தலித் இளைஞர் கடந்த ஏப்.15-ம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டுள்ளார். இவர் பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குரைஞர் குமாஸ்தாவாக பணியாற்றியவர். இச்சம்பவம் பரங்கிப்பேட்டை பகுதியில் பதற்றமான நிலையை உருவாக்கியுள்ளது. இவ்வழக்கிலும் காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என கருத்து ஏற்பட்டுள்ளது. குமாஸ்தா ராஜா கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, எஸ்சி., எஸ்டி வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரது குடும்பத்திற்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.