அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரம் அருகே லாரி மோதிய விபத்தில் இருவர் சாவு!

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா தாண்டவளக்குப்பத்தைச் சேர்ந்த சிவனேசன் (28). இவர் சென்னையில் பாத்திரக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் வேலைபார்க்கும் ஐயப்பனும் (19) ஞாயிற்றுக்கிழமை இரவு

News image
Updated On :22 ஏப்ரல் 2013, 11:23 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது, லாரி மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த பாத்திர வியாபாரி உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா தாண்டவளக்குப்பத்தைச் சேர்ந்த சிவனேசன் (28). இவர் சென்னையில் பாத்திரக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் வேலைபார்க்கும் ஐயப்பனும் (19) ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர். இன்று அதிகாலை 2.30 மணிக்கு புதுச்சத்திரம் காவல் நிலையம் அருகே எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மேற்கண்ட இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.