அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கார், லாரி மோதிய விபத்தில் ஒருவர் சாவு: 3 பேர் காயம்

சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் மஞ்சக்குழி கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (47). இவர் தனது மனைவி ரீட்டா (37), ஆயிபுரத்தைச் சேர்ந்த கலையரசி (35) உள்ளிட்ட மூவரும் திங்கள்கிழமை இரவு வாடகை காரில் நாகை

News image
Updated On :23 ஏப்ரல் 2013, 9:22 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே சி.முட்லூர் வெள்ளாற்று பாலம் அருகே டிப்பர் லாரி கார் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் மஞ்சக்குழி கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (47). இவர் தனது மனைவி ரீட்டா (37), ஆயிபுரத்தைச் சேர்ந்த கலையரசி (35) உள்ளிட்ட மூவரும் திங்கள்கிழமை இரவு வாடகை காரில் நாகை மாவட்டம் சீர்காழிக்கு புறப்பட்டனர். கார் சி.முட்லூர் வெள்ளாற்று பாலம் அருகே வந்த போது டிப்பர் லாரி ஒன்று கார் மீது மோதியது. இவ்விபத்தில் டிரைவர் உள்ளிட்ட 4 பேரும் படுகாயம் அடைந்து ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஜெயச்சந்திரன் (47) இறந்தார். மனைவி ரீட்டா (37), கலையரசி (35), டிரைவர் ஆகிய மூவரும் மேல் சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.