சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு சிதம்பரம் கிளை நூலகத்திலிருந்து புத்தகங்கள் பெறப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு நூல்கள் வாசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஜான்சன், வாசக வட்டத் தலைவர் சி.டி.ராமசாமி, தலைமை ஆசிரியை ப.வாசுகி, நூலகர் சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு வாசிக்க புத்தகங்களை வழங்கினர். மேலும் கிளை நூலகத்திற்கு புதிய உறுப்பினர்களாக 50 மாணவ, மாணவியர்கள் சேர்க்கப்பட்டனர். முடிவில் தமிழாசிரியை கஸ்தூரிரங்கன் நன்றி கூறினார்.