அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

சிதம்பரம் நகரில் கஞ்சா அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இந்நிலையில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்ற போது வடக்குமெயின் ரோடு தில்லைக்காளியம்மன் கோயில் நுழைவு வாயில் அருகே நின்று கொண்டிருந்த தில்லைக்காளியம்மன் கோயில்

News image
Updated On :27 ஏப்ரல் 2013, 1:11 pm

G.Sundararaj

சிதம்பரத்தில் ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் ஒருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சிதம்பரம் நகரில் கஞ்சா அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இந்நிலையில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்ற போது வடக்குமெயின் ரோடு தில்லைக்காளியம்மன் கோயில் நுழைவு வாயில் அருகே நின்று கொண்டிருந்த தில்லைக்காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் (38) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் போலீஸார் மாரியப்பனிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.