அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாளை முதல் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தம்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து புதிய வீராணம் திட்டத்தின் மூலம் தினமும் விநாடிக்கு 76 கனஅடி நீர் சென்னை குடிநீர்

News image
Updated On :27 ஏப்ரல் 2013, 1:40 pm

G.Sundararaj

கடலூர் மாவட்டம் வீராணம்ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு நீர் அனுப்புவது நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் நிறுத்தப்படுகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து புதிய வீராணம் திட்டத்தின் மூலம் தினமும் விநாடிக்கு 76 கனஅடி நீர் சென்னை குடிநீர் வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பருவமழை பொய்தத்தாலும், மேட்டூரிலிருந்து போதிய அளவு நீர் திறந்து விடப்படாததாலும் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் ஏரியின் மொத்த கொள்ளளவான 1465 மில்லியன் கனஅடி, படிப்படியாக குறைந்து இன்றைய நிலவரப்படி வெறும் 75.80 மில்லியன் கனஅடியாக குறைந்தது.

இதனால் சென்னை குடிநீர் வாரியத்திற்கு சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி நீர்வாங்கி நெடுமாடத்திலிருந்து நீரை பம்ப் செய்து அனுப்ப முடியாமல் போனதால்  நாளை காலை முதல் நீர் அனுப்புவது முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று வரை சென்னை குடிநீர் வாரியத்திற்கு குறைந்தளவான விநாடிக்கு 18 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.