அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரத்தில் ஹோட்டல்கள் மூடல்: சுற்றுலாப் பயணிகள் உணவு கிடைக்காமல் அவதி

இதனையடுத்து சிதம்பரம் மற்றும் அண்ணாமலைநகரில் அனைத்து ஹோட்டல்களும் மூடப்பட்டிருந்தது. சுமார் 200-க்கும் மேற்பட்ட குளு, குளு வசதியுடான ஹோட்டல்கள் மற்றும் சாதாரண ஹோட்டல்கள் அனைத்தும்

News image
Updated On :29 ஏப்ரல் 2013, 9:20 am

G.Sundararaj

ஹோட்டல்களுக்கு மத்தியஅரசு சேவை வரி விதித்துள்ளதை கண்டித்தும், சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக முழுவதும் இன்று ஒருநாள் ஹோட்டல்களை மூடிவது என தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து சிதம்பரம் மற்றும் அண்ணாமலைநகரில் அனைத்து ஹோட்டல்களும் மூடப்பட்டிருந்தது. சுமார் 200-க்கும் மேற்பட்ட குளு, குளு வசதியுடான ஹோட்டல்கள் மற்றும் சாதாரண ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக சிதம்பரத்தில் பஸ்நிலையம், நடராஜர் கோயில் அருகாமையில் உள்ள கீழரதவீதியில் ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்ததால் இன்று சிதம்பரம் நகருக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் உணவு கிடைக்காமல் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதனால் சிதம்பரம் கீழரதவீதியில்  சாலையோரம் உள்ள தள்ளுவண்டி உணவகங்களில் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை உள்ள சுற்றுலாப் பயணிகள் போட்டி, போட்டுக் கொண்டு உணவினை வாங்கி சாப்பிட்டனர். ஒரு சிலர் உணவிற்கு பதிலாக பழங்கள், பிஸ்கட், பிரட், ஜாம் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.