மாதனூர் அருகே செல்போன் டவர் அமைக்க இடம் தேர்வு செய்வதாக கூறி 7 சவரன் தங்கச் சங்கிலியை ஒரு நபர் திருடிச் சென்றதாக ஆம்பூர் தாலுகா போலீஸார் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.
மாதனூர் அருகே வடகாத்திப்பட்டி பஜனை கோயில் தெருவை சேர்ந்த பழனியின் மனைவி சுலோசனா (59). இவர் வீட்டருகே உள்ள தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் செல்போன் டவர் அமைக்க இடம் தேடிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். அந்த நிலத்தில் செல்போன் டவர் அமைக்க இடம் தேர்வு செய்வதாகவும், சிக்னல் சரியாக கிடைக்கிறதா என பார்ப்பதாகவும் கூறியுள்ளார். நிலத்தில் குழி தோண்டி அங்கு சிக்னல் வருகிறதா என பார்க்க தங்கச் சங்கிலியை அந்த குழியில் போட்டு பார்க்க வேண்டுமெனக் கூறி சங்கிலியை வாங்கி போட்டுள்ளார். பிறகு அந்த செயினுடன் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து சுலோசனா ஆம்பூர் தாலுகா போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.