விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூத்துக்குடி- பயங்கர ஆயுதங்களால் பஸ்ஸில் தாக்கிக் கொண்ட மாணவர்கள்: பயணிகள் ஓட்டம்

தூத்துக்குடி அருகே பயங்கர ஆயுதங்களால் பள்ளி மாணவர்கள் தங்களுக்குள் தாக்கிக் கொண்டனர். இதில் பயந்து போன பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

News image
Updated On :7 பிப்ரவரி 2013, 6:29 am

இன்பராஜ்

தூத்துக்குடி அருகே பயங்கர ஆயுதங்களால் பள்ளி மாணவர்கள் தங்களுக்குள் தாக்கிக் கொண்டனர். இதில் பயந்து போன பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில், பஸ் ஒன்று காலை வழக்கம்போல் சென்றது. பஸ்ஸில் பயணிகள் அதிகம் இருந்தனர். அவர்களிடையே காலை பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் இருந்தனர். அந்த பஸ், முப்பாத்து ஓடை என்ற இடத்துக்கு அருகே வந்தபோது, திடீரென அந்த பஸ்ஸில் இன்னொரு மாணவர்கள் குழு ஏறியது. அதுவும், கைகளில் கம்பு கட்டைகளுடன்! ஏறிய கும்பல், பஸ்ஸில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட இன்னொரு தரப்பு மாணவர்களை சரமாரியாக தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர்களும் திருப்பித் தாக்கினர். இந்த அடிதடி ரகளையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் பஸ்ஸில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

ஓட்டுநர் உடனடியாக பஸ்ஸை தென்பாகம் காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றார். தென்பாகம் போலீஸார் புகார் பதிவு செய்து, தப்பியோடிய மாணவர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.