ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக உயர்த்தி அரசு உத்தரவு

தமிழகம் முழுவதுமுள்ள 218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2013, 12:15 pm

வி.குமாரமுருகன்

தமிழகம் முழுவதுமுள்ள 218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா வெளியிட்டுள்ள அரசாணையில்(11) கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் 2001 கல்வியாண்டு முதல் தேவை மற்றும் தகுதியின் அடிப்படையில் தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.அது போல் 2010-11 ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வித்திட்டதின் கீழ் 218 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.இப்படி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் 2012-2013-ம் கல்வியாண்டில் 6,7,8 வகுப்புக்களுடன் முழுமை பெற்ற நடுநிலைப்பள்ளிகளாக இயங்குகின்றன.எனவே 218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்த தொடக்க கல்வி இயக்குநர் கோரியுள்ளார்.

இதனையடுத்து, 2010-11 ஆம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 218 தொடக்கப்பள்ளிகள் 2012-13ம் கல்வியாண்டில் முழுமை பெற்ற நடுநிலைப்பள்ளிகளாக இயங்குவதால் அப்பள்ளிகளில் உள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக நிலையுயர்த்தப்படுகிறது.

 அவ்வாறு நிலையுயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களிலிருந்தும்,பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர் ஆகிய பணியிடங்களிலிருந்தும் முன்னுரிமை பட்டியலின் படி,பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மூலமாக நிரப்பிக் கொள்ள தொடக்க கல்வி இயக்குநருக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.