கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கடலில் மூழ்கி இளைஞர் சாவு! சாவில் சந்தேகம் என அண்ணன் போலீஸில் புகார்

சிதம்பரம் அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார்.

News image
Updated On :21 பிப்ரவரி 2013, 11:48 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார்.

சிதம்பரத்தை அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் மகன் கார்த்திக் (20). இவர் தனது நண்பர்கள் வெங்கடேசன், நாராயணசாமி, சங்கர், ராமகிருஷ்ணன், வெங்கடேசன் உள்ளிட்ட 5 பேருடன் புதன்கிழமை கிள்ளை எம்ஜிஆர் திட்டு கடற்கரைக்கு பகுதிக்கு சென்று கடலில் குளித்துள்ளனர். அப்போது கார்த்திக் கடல் அலையில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். அவரை மீனவர்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இளைஞர் கார்த்திக் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் கார்த்திக்கின் அண்ணன் அசோக்ராஜ் தனது தம்பி சாவில் சந்தேகம் உள்ளதாக கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கிள்ளை போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.