கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சோடியம் தொழில்நுட்பம் வீனாக போகவில்லை: விஞ்ஞானி பிரபாத்குமார்

கல்பாக்கம் அனு மின்நிலையத்தில் 1700 கோடி செலவில் சோடியம் தொழில்நுட்பத்தில் மின்உற்பத்தி திட்டப்பணி நடைபெற்று வருகிறது. சோடியம்

News image
Updated On :21 பிப்ரவரி 2013, 11:38 am

ஜி.சுந்தரராஜன்

கல்பாக்கம் அனு மின்நிலையத்தில் 1700 கோடி செலவில் சோடியம் தொழில்நுட்பத்தில் மின்உற்பத்தி திட்டப்பணி நடைபெற்று வருகிறது. சோடியம் பயன்பாடு வினாகப் போகவில்லை. 90 சதவீத பணி முடிவுற்றுள்ளது. விரைவில் அணு உலையானது முழுத்திறனுடன் இயக்கப்படும் போது சோடியம் தொழில்நுட்ப பயன்பாடு வெற்றி அளிக்கும் என கல்பாக்கம் அணுமின்நிலைய அணு விஞ்ஞானி முனைவர் பிரபாத்குமார் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பின்னர் அணுவிஞ்ஞானி முனைவர் பிரபாத்குமார் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இயந்திரவியல்துறை சார்பில் வியாழக்கிழமை பல்கலைக்கழக செனட் ஹாலில் நடைபெற்ற தாவர எரிபொருளும், அதன் செயல்பாடுகளும் என்ற தலைப்பிலான இருநாள் கருத்தரங்கு தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

அவர் பேசியது: அணுசக்தி இன்றை தேவைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவின் ஆற்றில், தேவைகளை தமிழ்நாடு பல்வேறு வகையில் பூர்த்தி செய்கிறது. இந்தியா இயற்கை வளங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இன்றைய தேவைகளை பூர்த்தி செய்ய அணுசக்தி தொழில்நுட்பங்கள், அதன் மூலப்பொருள்கள் மிகவும் பயன்படுகிறது என பிரபாத்குமார் தெரிவித்தார்.

துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசுகையில் இன்றைய காலக்கட்டத்தில் அணுசக்தி போன்ற மாற்று எரிசக்தி தேவை முக்கியத்துவம் பெருவதாக தெரிவித்தார். பொறியியல் புல முதல்வர் எஸ்.வேலுசாமி, இயந்திரப் பொறியியல் துறைத்தலைவர் முனைவர் என்.கிருஷ்ணமோகன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச.சிவப்பிரகாசம் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் வி.மணிஇனியன் அறிமுகவுரையாற்றினார். துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.செந்தில்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.