அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவிலி. அருகே தொடரும் இரு சமுதாயத்தினர் பிரச்னை: ஒருவர் கைது

கூமாப்பட்டி, இம்மானுவேல் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சு.சுந்தரம் (38). இவர் ராமசாமிபுரம் அம்பேத்கர் தெரு வழியே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கூமாப்பட்டி, ஆர்.சி. தெருவைச் சேர்ந்த பூஞ்சோலை மகன் சோலைக்குட்டி

News image
Updated On :16 ஜனவரி 2013, 1:56 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வருவதால் இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் தெரு வழியே வந்தவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.

கூமாப்பட்டி, இம்மானுவேல் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சு.சுந்தரம் (38). இவர் ராமசாமிபுரம் அம்பேத்கர் தெரு வழியே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கூமாப்பட்டி, ஆர்.சி. தெருவைச் சேர்ந்த பூஞ்சோலை மகன் சோலைக்குட்டி (33) என்பவர் ஏன் எங்கள் தெரு வழியே வருகிறாய்? இனிமேல் எங்கள் தெரு வழியே வந்தால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினாராம். மேலும் சோலைக்குட்டி தாக்கியதில் சுந்தரம் காயம் அடைந்தார். இது குறித்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழ்ககுப் பதிவு செய்து சோலைக்குட்டியை கைது செய்தனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வ.புதுப்பட்டி பகுதியில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த இரு தரப்பினர் நீண்ட காலமாக மோதிக்கொள்ளும் நிலையை கட்டுப்படுத்த, வ.புதுப்பட்டியில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் தனி காவல் நிலையம் அமைக்கப்படும் என்றும், சுமார் 60 போலீஸார் அடங்கிய ஒரு கம்பெனி சிறப்பு காவல் படையினர் நிரந்தரமாக இங்கு நிறுத்தப்படுவார்கள் என்றும் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நடைமுறை விரைவில் செயல்படுத்தப்பட்டு, மோதல் சம்பவங்கள் தடுக்கப்பட்டால் தான் உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதத்தை உடனடியாக கட்டுப்படுத்த இயலும் என்று இப் பகுதி மக்கள் கருதுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.