சிதம்பரம் நகரில் பெண் வெட்டிக்கொலை: மகன், மகள் படுகாயம்
சிதம்பரம் நகரில் பஸ்நிலையம் அருகே உள்ள குமரன்தெருவில் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.


சிதம்பரம் நகரில் பஸ்நிலையம் அருகே உள்ள குமரன்தெருவில் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது மகன், மகள் வெட்டு விழுந்து படுகாயத்துடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிதம்பரம் குமரன்தெருவில் வசிக்கும் லேட் செல்வராஜ் மனைவி லலிதா (45) மற்றும் அவரது மகன் செந்தில் (26), மகள் ரேவதி (20) ஆகிய மூவரும் சனிக்கிழமை இரவு மூன்று பேர் கொண்டலால் வெட்டப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே கழுத்து அறுபட்டு லலிதா இறந்தார். படுகாயமடைந்த செந்தில், ரேவதி ஆகிய இருவரும் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். பஸ்நிலையத்தில் உள்ள கடை நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து சனிக்கிழமை மாலை லலிதா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துவிட்டு வீடு திரும்பிய பின்னர் இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...