கடையநல்லூர்,முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கண்ணன்,வெள்ளைச்சாமி,முப்புடாதி.ஜோதிராமலிங்கம்,முருகையா,ஆறுமுககுமார்,சங்கர்,ரத்தினவேல்,கணேசன்,வைத்தியலிங்கம் ஆகிய 10 பேரும் சேர்ந்து மோட்டார் வாகன நிதிநிறுவனத்தை நடத்தி வந்தார்களாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணன் இறந்து விட்டாராம். இந்நிலையில் கண்ணனின் மனைவி விஜயலெட்சுமி, தனது கணவரின் பங்கு தொகையை திருப்பி தருமாறு கேட்டாராம்.இதனையடுத்து சில பத்திரங்களில் விஜயலெட்சுமியிடம் கையெழுத்து பெற்ற மற்ற பங்குதாரர்கள் பங்குத் தொகையான ரூ. 2லட்சத்தை திருப்பி கொடுக்க வில்லையாம்.இது தொடர்பாக கடையநல்லூர் காவல் ஆய்வாளர் சபாபதி,உதவி ஆய்வாளர் சிவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.