குன்னம் அருகே கூலித்தொழிலாளி மர்மச்சாவு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே கூலித்தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே கூலித்தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.
குன்னம் அருகே கிழுமத்தூர் கிராமத்தில் உள்ள மருதையாறு அருகே 35 வயதுள்ள இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக, அந்த ஊராட்சி தலைவர் ரகுபதி ஞாயிற்றுக்கிழமை காலை குன்னம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற குன்னம் போலீஸார் இறந்து கிடந்தவரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டபோது, கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் கூலித்தொழிலாளியான பாஸ்கர் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பாஸ்கரின் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் அளித்த புகாரின்பேரில் குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் பாலசுப்ரமணியன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...