வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் கொலை வழக்கு தண்டனை கைதியிடம் இருந்து செல்போன் ஒன்றை சிறைத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
பெங்களூர், காவேரி நகரை சேர்ந்த அசோக்குமார் (37), குடியாத்தம் அருகே நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை கைதியாக உள்ளார். சிறை அதிகாரிகள் ரோந்துப் பணி மேற்கொண்டபோது அவரிடம் செல்போன் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அதை பறிமுதல் செய்து பாகாயம் காவல் நிலையத்தில்
ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.