பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வரதட்சணை கொடுமை 3 பேர் கைது

மாதனூர் அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய மூவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :3 ஜூன் 2013, 5:32 pm

மாதனூர் அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய மூவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மாதனூர் அருகே குருவராஜபாளைம் கிராமத்தை சேர்ந்தவர் கம்பிகட்டும் தொழிலாளி சிவா (27). இவரது மனைவி ராகல்(22). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சிவா, அவரது தந்தை பன்னீர்செல்வம் (53), தாய் சாந்தி (45) ஆகியோர் ராகலிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் வீட்டில் தனியாக இருந்த ராகலுக்கு மாமனார் பன்னீர்செல்வம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினாராம். இதுகுறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸில் ராகல் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிவா மற்றும் அவரது பெற்றோரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.