இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தெரிவித்ததாவது: கிள்ளை அழிச்சிக்குடி தற்போது வசித்து வரும் செந்தில்லின் சொந்த ஊர் உசுலம்பட்டியாகும். தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். அதே வேளையில் சிதம்பரம் தெற்குவீதி ஆட்டோ நிறுத்த்தில் ஆட்டோவை வாடகைக்கு வீட்டுள்ளார். இந்நிலையில் போலீஸாரால் சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்ட செந்திலை விசாரணை மேற்கொண்டதில் அண்ணாமலைநகரில் ராணி என்ற நர்சிடம் மிளகாய் பொடி தூவி 8 பவுன் செயினையும், சிதம்பரம் மேலவீதியில் செல்லையா என்பவரது மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து 9 பவுன் நகைகளையும், பச்சையப்பன் பள்ளித்தெருவில் சேதுஸ்கேன் மருத்துவமனையில் ஹேமலதாவிடம் கத்தியை காட்டி மிரட்டி ஐந்தரை பவுன் செயினையும், சிவசக்திநகரில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மனைவி செல்லத்தாயிடம் 6 பவுன் செயினையும் பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து செந்திலை கைது செய்து, அவர் கொடுத்த தகவலின் பேரில் இருபத்து எட்டரை பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீஸார் செந்திலை சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர் என அவர் தெரிவித்தார்.